மட்டு-இந்து கல்லூரி மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி

  (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட
  மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 2018 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர்   எஸ் டி .முரளிதரன்  தலைமையில் நடைபெற்றது


விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்  ,சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , கௌரவ விருந்தினர்களாக வலயக் கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார்,  மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் கே அருள்பிரகாசம்    மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள்  என பலர்  கலந்துகொண்டனர்

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .
விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,


பாடசாலையின் 2018ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற இல்ல மாணவர்களுக்கு பரிசில்களும்,  வெற்றி கிண்ணங்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்  .