புனித ஜோசெப் வாஸ் வித்தியால மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பவனி


(லியோன்)

 ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .


இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில்  நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித  ஜோசெப் வாஸ்  வித்தியாலத்தில் முதல் கட்ட செயல்திட்டம் இன்று நடைபெற்றது .

வித்தியாலய   அதிபர்   எம் டி .சுதாகரன்  தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  நடைபவனி  மட்டக்களப்பு நகரில்   நடைபெற்றது ,

இந்த விழிப்புணர்வு நடை பவனியாது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு  திருகோணமலை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர்  சுற்றுவட்டம்  வரை சென்று மீண்டும் நடை பவனி  பாடசாலையை  வந்தடைந்து 

இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு நடை பவனியில் கலந்துகொண்டதுடன் , பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இஸ்டிக்கர் ஒட்டப்பட்டு காட்சி படுத்தப்பட்டன .

இந்த விழிப்புணர்வு நடை பவனியில் பாடசாலை பிரதி அதிபர் அருட்பணி பிறைனர் செல்லர் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் எ .ஜெகநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.