(லியோன்)
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலாலய
கீதம் பாடப்பட்டது .இதனை தொடர்ந்து ஆசியுரையுடன் குரு கௌரவிப்பு இடம்பெற்றது
தொடர்ந்து நர்த்தன
பவனம் நாட்டியாலயத்தின் 12வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “
நிருத்தியாமிர்தா “ சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் தொடர்ந்து நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் மாணவர்களின்
புஷ்பாஞ்சலி , ஆலாரிப்பு ,ஜதிஸ்வரம் ,பாவை
நடனம் , சப்தம் ,தாலாட்டு , பதம் , வர்ணம்
, ஹஸ்த கலாபம் ,புத்தாக்க நடனம் , கீர்த்தனம் , வர்ண ஜாலா நடனம் , தில்லானா ,
மங்களம் போன்ற நடன நிகழ்வுகளும் , மாணவர்களுக்கான நினைவு சின்னங்கள் வழங்கும்
நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி .சுஜாதா
குலேந்திரன் ,ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ,
ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , செங்கலடி மத்திய கல்லூரி
அதிபர் .அருணாசலம் , மகாஜன கல்லூரி அதிபர் அருமைராஜா , மயிலம்பாவெளி விக்னேஸ்வரா
வித்தியாலய அதிபர் கே .ஸ்ரீதரன் மற்றும் நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் மாணவர்கள் ,பெற்றோர் என பலர்
கலந்துகொண்டனர்