அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் சிறப்பு ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு அமிர்தகழி  கருணை  பாலர் பாடசாலையின் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி கருணை  பாலர் பாடசாலையில்கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு  அதிபர் திருமதி எஸ் .பிரதீபா  தலைமையில்  சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து  மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன் சிறார்களின்  ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,

இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்குதந்தை சி வி .அன்னதாஸ் , மட்டக்களப்பு வலயக் கல்வி  உதவிக் கல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜா ,  மாவட்ட செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .குகதாசன் , அருட்தந்தையர்களான மெருசன் என்றிக் , நிகஷ்டன் பீடஸ் மற்றும் பாடசாலை  ஆசிரியர்கள் , பாடசாலை சிறார்கள் ,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .