(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக
சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் “ தடைகளே படிகளாக ‘ எனும்
மலர் வெளியீட்டு நிகழ்வும் மாற்றுத்திறனாளிகளின் கைவினைப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
பிரதேச செயலாளர் கே குணநாதன் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , உதவி திட்டமிடல்
பணிப்பாளர் எஸ் .சதிஸ் குமார் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்
நிகழ்வில் தரிசனம், வாழ்வோசை,ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும் ,பிரதேச செயலக அலுவலக
உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்
என பலர் கலந்துகொண்டனர்
சர்வதேச மாற்றுத்
திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் நிகழ்வுகளும் ,விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது .