தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பு மனு தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை காலை முதல்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல்செய்யும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கான வேட்பு மனுவை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்று காலை தாக்கல் செய்தது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிரதிதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.திரவியம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன்,மகளிர் அணி தலைவர் திருமதி செல்வி மனோகர் தலைமையிலான குழுவினர் பெருமளவான ஆதரவாளர்களுடன் வருகைதந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கான பதினொரு வட்டாரங்களுக்குமான வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.