ஊழல் அற்ற மாநகரசபையினை உருவாக்குவோம் -ஊடகவியலாளர் உதயகாந்த்

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை ஊழல் அற்ற சிறந்த கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வகையில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக சுயேட்சைக்குழுவில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் ஊடகவியலாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் உ.உதயகாந்த் தலைமையிலான ஊடகவியலாளர்கள்,இளைஞர் யுவதிகளைக்கொண்ட குழுவினர் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.

இனிவரும் காலங்களில் உள்ளுராட்சிசபைகளின் செயற்பாடுகளை ஊடகவியலாளர்கள் சரியானமுறையில் கொண்டுசெல்லவேண்டும் என்ற அடிப்படையிலேயே இதில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளதாக ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான உ.உதயகாந்த் தெரிவித்தார்.

சுயேட்சையாக கேடயம் சின்னத்தில் களமிறங்கியுள்ளதாகவும் தமக்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் நிலையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.அதனை ஊக்கப்படுத்தும் வகையிலும் தாங்கள் களமிறங்கியுள்ளதாகவும் உதயகாந்த் தெரிவித்தார்.