ஆரையம்பதியில் விபத்து –மயிரிழையில் தப்பிய குடும்பம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் நேற்று இரவு கார் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்தவர்கள் எந்தவித உயிர் ஆபத்தும் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.

நேற்று இரவு 10.மணியளவில் பதுளையில் இருந்து வந்த கார் ஒன்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவன் மனைவி இருந்துள்ளனர்.நித்திரை தூக்கமே இந்த விபத்துக்கு காரணம் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்த கார் மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன் காரும் கடுமையான சேதமடைந்துள்ளது.

இந்த விபத்துக்காரமாக ஆரையம்பதி பிரதேசத்தின் மின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் மின்சார சபையினர் திருத்தவேளைகைள மேற்கொண்டு இன்று காலை மின்சாரத்தினை பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.

இந்த விபத்தின்போது கணவன் மனைவி சிறிய காயங்களுக்கு உள்ளனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.