(லியோன்)
நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு ஒழிப்பு செயல் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன .
இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு நாவக்குடா
சுத்தானந்தா சன சமூக நிலையம் ,சுத்தானந்தா விளையாட்டு கழகம் இணைந்து “ கிராமத்தை சுத்தமாக பாதுகாப்போம் , கழிவுப்
பொருட்களை போடாதீர்கள் “எனும் தொனிப்பொருளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை நாவாக்குடா
கிராம பகுதியில் இன்று முன்னெடுத்தனர் .
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் தலைமையில் ஆரம்பமான இந்த
சிரமதான பணியில் மாநகர சபை ஊழியர்கள் , சுத்தானந்தா சன சமூக நிலையம் ,சுத்தானந்தா
விளையாட்டு கழகம் அங்கத்தவர்கள்
கலந்துகொண்டனர்