மாவட்ட செயலக வருடாந்த ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)

 மட்டக்களப்பு   மாவட்ட செயலக 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின்  வருடாந்த ஒளிவிழா நிகழ்வு மாவட்ட ஒளிவிழா குழுவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார்  தலைமையில்  மாவட்ட செயலகத்தில் (15) நடைபெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்களும்  மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின்   ஒளிவிழா கலை நிகழ்வுகள்  இடம்பெற்றது.   

அதிதிகளாக  மட்டக்களப்பு மறைக்கோட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் , மட்டக்களப்பு கல்குடா மறை பயிற்சி கல்லூரி  அதிபர் சுஜிதர்  சிவநாயகம்,,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ் .ஸ்ரீகாந்த் ,மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா ஆகியோர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் , பாடசாலை மாணவ சிறார்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .