ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  கெத்செமனே கொஸ்பல் ஆலய   மாணவர்களின்  ஒளிவிழா  நிகழ்வு    மட்டக்களப்பு தேவநாயகம் (08) பிற்பகல் நடைபெற்றது


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  கெத்செமனே கொஸ்பல் ஆலய   மாணவர்களின் வருடாந்தம்  ஒளிவிழா  நிகழ்வு    ஆலய தலைமை போதகர் அருட்திரு பி டப்ளியு . மரியதாஸ்   தலைமையில்   மட்டக்களப்பு தேவநாயகம்   நடைபெற்றது

ஆரம்ப  நிகழ்வாக   அதிதிகளை மலர்மாலை அணிவித்து  பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

இதனை   தொடர்ந்து   இறைவணக்கத்துடன்   , ஒளிவிழா சிறப்பு செய்திகளுடன்  மாணவர்களின் ஒளிவிழா  கலை  நிகழ்வுகள்     இடம்பெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ,விசேட அதிதிகளாக  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி  நாகவத்த ,ஓய்வுநிலை கிழக்குமாகான கல்விப்பணிப்பாளர் எ எம் இ . போல் , ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி .என் .முகுந்தன்  மற்றும் அருட்தந்தையர்கள் ,மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .


வருடாந்தம் நடைபெறும் இந்த ஒளிவிழா  நிகழ்வில்  வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பம்களின் பாடசாலை  செல்லும் சுமார் 400 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.