லெட்டர் ஒப் ஹோப் அமைப்பின் ஹோப் யுனி
வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு
மட்டக்களப்பில் நடைபெற்றது .
சிறுவர்களை மையப்படுத்திய குடும்ப அபிவிருத்தி திட்டங்களை
முன்னெடுத்து வரும் லெட்டர் ஒப் ஹோப் அமைப்பின் அனுசரணையில் ஹோப் யுனி
வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு (15) மட்டக்களப்பு வை எம் சி எ
மண்டபத்தில் நடைபெற்றது .
லெட்டர் ஒப் ஹோப் அமைப்பின் பொதுமுகாமையாளர் திருமதி .எம்
.ரஞ்சினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் கே .குணநாதன் , சிறப்பு விருந்தினர்களாக லெட்டர் ஒப் ஹோப் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எஸ் . அருமைநாயகம்
,சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி கே .சசிகரன் ,ஆகியோர் கலந்துகொண்டனர் .
லெட்டர் ஒப் ஹோப் அமைப்பானது மட்டக்களப்பு
மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
இதன் கீழ் மண்முனை வடக்கு . மண்முனை மேற்கு , மண்முனை பற்று ,ஏறாவூர்
, செங்கலடி ,வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலக
பிரிவுகளில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் ,
மாணவர்களின் கல்வி அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்து
வருகின்றது .
திட்டத்தின் ஊடாக பயன்பெறும் பயனாளிகள் மற்றும் மாணவர்களை
ஒன்றிணைத்த நிகழ்வாக வருடந்தோறும் நடத்தப்படும் ஹோப் யுனி
வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் , பயனாளிகள் மற்றும்
பல்கலைக்கழக மாணவர்களில் சாதனையாளர்களாக
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் . இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் , லெட்டரப் ஒப் ஹோப்
அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்