மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசசபைகளுக்கும் ஒரு நகர சபைகளுக்குமாறு வேட்பு மனுதாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுபெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 அரசியல் கட்சிகளும் 6சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான மா.உதயகுமார் தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கலின் அடிப்படையில் ஒரு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசசபை ,ஏறாவூர்ப்பற்று பிரதேசபை,ஏறாவூர் நகரசபை,மண்முனைப்பற்று பிரதேசசபை ஆகிய சபைகளுக்கு 54கட்சிகள்,குழுக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியபோதிலும் 41 கட்சிகள் சுயேட்சைக்குழுக்களே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.