அனர்த்த முகாமைத்துவம் முதலுதவி உபகுழுவின் செயற்பாட்டுக் கூட்டம்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்களின் சம்மேளன அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதலுதவி உபகுழுவின் செயற்பாட்டுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . 


மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பாகவும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டு திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் உதவி மாவட்ட செயலாளர்   எ நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவி பணிப்பாளர் எம் சி எம்  ரியாஸ் மற்றும் அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .


இலங்கை அரசாங்கம் மற்றும் மனிதநேய அமைப்புக்களினது தயார் நிலை மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன் ஆகியவற்றை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாக  இந்த  கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது