(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்களின்
சம்மேளன அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதலுதவி உபகுழுவின் செயற்பாட்டுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய
அனர்த்தங்கள் தொடர்பாகவும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டு திட்டங்கள் தொடர்பான
கலந்துரையாடல் உதவி மாவட்ட செயலாளர் எ நவேஸ்வரன்
தலைமையில் நடைபெற்றது
இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
திணைக்கள உதவி பணிப்பாளர் எம் சி எம்
ரியாஸ் மற்றும் அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்களின் சம்மேளன
பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .
இலங்கை அரசாங்கம் மற்றும் மனிதநேய அமைப்புக்களினது தயார் நிலை மற்றும்
அவசரகால பதிலளிப்பு திறன் ஆகியவற்றை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது