(லியோன்)
உலக நீரிழிவு தினத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்பூட்டலும்,
கலந்துரையாடலும் மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் ஏற்பாட்டில் உலக
நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட வைத்திய நிபுணர்கள் பொதுமக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டலும் ,
கலந்துரையாடலும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் நீரிழிவும் சமூகமும் எனும்
தலைப்பில் , குடும்பநல வைத்திய நிபுணர்
வைத்தியர் கே . அருளானந்தம் , கர்ப்பமும் சர்க்கரையும் ஐம் தலைப்பில் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணியல் வைத்திய
நிபுணர் . எம் . திருக்குமார் , உணவே ஔடதமாக எனும் தலைப்பில் சௌக்கிய விஞ்ஞான பீட
வைத்திய நிபுணர் வைத்தியர் கே .டி .சுந்தரேசன்
நீரிழிவும் ஜதீகமும் ஜயந் தெளிதலும் எனும் தலைப்புக்களில் ,விசேட பொது
வைத்திய நிபுணர் எம் .உமாகாந் ஆகிய வைத்தியர்கள்
விரிவுரைகளை வழங்கினார்கள் .
நீரிழிவு நோயின் தாக்கம்
, நோயின் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் .உணவு பழக்கவழக்கம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது இந்நிகழ்வில்
வைத்தியர்கள் , சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் , பொதுமக்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்