(லியோன்)
வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா நடாத்தும்
சிறார்களுக்கான கலைசார் பங்குபற்றல் கருத்தரங்கு எதிர்வரும் 02.12.2017 (சனிக்கிழமை) காலை 9.30 முதல் 1.00 மணிவரை
மன்றேசா வண்ணத்;துப்பூச்சி சமாதானப்பூங்கா முற்றத்தில் இடம்பெறவுள்ளது
உங்கள் பிள்ளைச்செல்வங்களை
மகிழ்ச்சிகரமான பாடசாலைக்கல்வியில் ஈடுபடுத்த முற்றிலும் மகிழ்ச்சி நிறைந்ததும்
சிநேகபூர்வமானதுமான கல்விசார் உடல், உள
ஊக்கப்படுத்தல் அமர்வுகளை வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா ஏற்பாடு
செய்திருக்கின்றது.
21 வருடகால அனுபவத்தின் மூலம் சிறார்களின்
மன நிலையை நன்கறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களின்
ஆலோசனையுடன் மிகவும் நுணுக்கமாக
வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைவாக நடைபெறவிருக்கும் மகிழ்ச்சிகரமான
இப்பயிற்சிகள் மூலம் எதிர்காலத்தின் சவால் நிறைந்த உலகுக்கு முகம்கொடுக்கக்கூடிய
வர்களாக நம் சிறார்களைத்தயார்படுத்தி, முறைசாராக்
கல்வி மூலம் கலை சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
பல்வேறு வகையான அணுகுமுறைகள், நுணுக்கங்கள் மூலம் சிறார்களிடம் மறைந்து கிடக்கும் திறனை இனங்கண்டு
அதனை உற்சாகப்படுத்தி சுயாதீனமான கல்வியை நோக்கி அவர்களை முன்னேற்றி நாளைய உலகின்
நற்பிரஜைகளாக உருவாக்கும் ஒரு சிறந்த திட்டமாக இம்முறைசாராக்கல்விப் பயிற்சிகள்
முன்னெடுக்கப்படவுள்ளது.
உங்கள் பிள்ளை ஏதோ ஒரு துறையில்
ஈடுபாடு உள்ளவராகவோ அல்லது எதிலும் நாட்டமில்லாதவராகவோ எப்படியிருந்தாலும்
வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவில் இடம்பெறவிருக்கும் இப்பயிற்சிகள் அவரை
சிறப்பான ஒரு பிரஜையாக உருவாக்கித்தரும் என்பதில் ஐயமில்லை.
இப்பயிற்சி அமர்வுகள் சம்பந்தமான
மகிழ்ச்சிகரமான கருத்தரங்கு எதிர்வரும் 02.12.2017 (சனிக்கிழமை) காலை 9.30 முதல்
1.00 மணிவரை மன்றேசா வீதி, பிள்ளையாரடி எனும் விலாசத்தில்
அமைந்திருக்கும் வண்ணத்;துப்பூச்சி சமாதானப்பூங்கா முற்றத்தில் இடம்பெறவுள்ளது
இக்கருத்தரங்கானது சுவாரஸ்யமான கதைகள்,
பிள்ளை, பெற்றோர் பங்குபெறும் அரங்க விளையாட்டுக்கள், கலைச்செயற்பாடுகள், இலத்திரனியல் சார் செயற்பாடுகள்,
முக ஓவியம், களிமண்;செயற்பாடுகள் என பல மகிழ்ச்சிகரமான
உள்ளடக்கங்களைக்கொண்டிருக்கும்.
உங்கள் பிள்ளையுடன் பெற்றோராகிய
நீங்களும் பங்குபற்றி மகிழலாம். பதிவுகளுக்கு 0776168859 மற்றும் 065 3063851
எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு . முற்பதிவுகளை செய்துகொள்ளுங்கள் .