மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் கிறிஸ்து
பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு
விழாவை முன்னிட்டு கல்லூரி அதிபர் ஜே ஆர் பி
விமல்ராஜ் தலைமையில் சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக
மாணவர்களினால் தீப ஒளியினை ஏந்தியவாறு அதிதிகளை பிரதான மண்டபத்திற்கு அழைத்து
வரப்பட்டன.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன் மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு
நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,
இந்நிகழ்வில்
அதிதிகளாக அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய
பங்கு தந்தை சி வி அன்னதாஸ் , புளியந்தீவு மெதடிஸ்த
திருச்சபை ஆலய சேகர முகாமைக்குரு
அருட்பணி ஜே . டப்ளியு
. யோகராஜா , கல்லூரி
ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் ,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,
பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .