கொக்கட்டிச்சோலை இளைஞன் கொலை –சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நீலண்டமடு பகுதியில், செவ்வாய் கிழமை (21) மாலை  18 வயது இளைஞரொருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான எம்.சாந்தகுமார்  என்பவரை நேற்று (22) கொக்கட்டிச்சோலை பொலிஸ்சார் கைது செய்ததுடன் இன்றைய தினம் (23) மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிபதி முன்னிலையில் மன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

குறித்த சந்தேக நபரின் உடம்பில் சிறு காயங்கள் இருந்ததன் காரணமாக வைத்திய அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிர்வரும் 06.12.2017 திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.