மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் புதிய நிருவாக சபை உருவாக்கம்

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க கூட்டம் கடந்த 18.11.2017 ம் திகதி மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கிடையில் இடம்பெற்றது.
 இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் - ந.நகுல்ராஜ் (வாழைசேனை பிரதேச செயலகம்)
செயலாளர் - லோ.தீபாகரன் (ஏறாவூர் நகர் பிரதேச செயலகம்)
உபதலைவர் - எஸ்.ரவிகுமார் (வாகரை பிரதேச செயலகம்)
உபசெயலாளர் - த.தரணிராஜூ (மண்முனை வடக்கு பிரதேச செயலகம்)
பொருளாளர் -ஜி.ஜி.வேற்றபிரவுன் (மாவட்ட செயலகம் கச்சேரி மட்டக்களப்பு)
மேலும் ஒவ்வோரு பிரதேச செயலகம் சார்பாகவும் மாவட்ட செயலகம் சார்பாகவும் 2 உத்தியோகத்தர் வீதம் 30 பேர் நியமிக்கப்பட்டனர்.