அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச அலுவலகம்  மற்றும் திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கு    சிங்கள  மொழி   தொடர்பான  பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது


தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ் இலங்கை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

அரச  மொழிக்கொள்கையினை  அமுலாக்கும்  பொருட்டு  தேசிய  சகவாழ்வு கலந்துரையாடல்கள்  அமைச்சின் கீழ்  நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை  வேலைத்திட்டத்தின்    தமிழ் மொழி  அரச அலுவலக  உத்தியோகத்தர்களுக்குசிங்கள  மொழி  கற்பிக்கும்  முறைமையினை   தேசிய  மொழி   மற்றும்  பயிற்சி  நிறுவனம் மாகாண  ரீதியாக  செயல்படுத்தப்பட்டு  வருகின்றது . 

இதற்கு அமைவாக  13  செயல்திட்டமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டது .தேசிய  மொழிக்கல்வி  மற்றும்  பயிற்சி   நிறுவன  உதவிபணிப்பாளர்                கணேசமூர்த்தி  கோபிநாத்  தலைமையில்   அரச அலுவலக  மற்றும்  திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கு  சிங்கள மொழி  பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக  மண்டபத்தில் இன்று  நடைபெற்றது   .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்
இதேவேளை பயிற்சி  நெறியினை நிறைவு உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ,அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வழங்கப்பட்டன . இந்நிகழ்வில்   அரச அலுவலகம்  மற்றும்              திணைக்கள  உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர் .