(லியோன்)
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிரேஷ்ட
பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வுகளும் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
இதற்கு அமைய சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள்
அலுவலகம் மற்றும் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து “ முதுமைக்குள்
புதுமை காண்போம் “ எனும் தொனிப்பொருளில் சிரேஷ்ட
பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்
எஸ் .அருள்மொழி தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் கலை நிகழ்வுகளும் , அவர்களுக்கான கௌரவிப்பும் , பரிசளிப்பு
நிகழ்வும் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினர்களாக தேசிய முதியோர் சம்மேளன தலைவர் க .நடேசன் , மாவட்ட
முதியோர் சம்மேளன தலைவர் கி . சிவபாலன் , மாவட்ட முதியோர் சம்மேளன பொருளாளர் ஞா .
பேரின்பம் ,மாவட்ட முதியோர் சம்மேளன உப தலைவர் எம் எம் .சாந்தி முகைதீன் ,சிறப்பு
விருந்தினராக கிழக்கு மாகான சமூக சேவைகள் திணைக்கள மாகான பணிப்பாளர் எம் சி .அன்சார்
ஆகியோர் கலந்துகொண்டனர் .
நடைபெற்ற மாவட்ட முதியோர் தின நிகழ்வில் மாவட்ட முதியோர் சங்க
உறுப்பினர்கள் , பிரதேச செயலக சமூக
சேவைகள் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்