(லியோன்)
மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்களில் 2017
ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்
அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும்
கௌரவித்து அவர்களுக்கான பரிசில்களும் ,சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எ .ராசு
தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
பாடசாலை ஆசிரியர்கள்
, மாணவர்கள் பெற்றோர்கள் பங்களிப்புடன் கே .ஒ .வி
அமைப்பு மற்றும் கல்லடி வேலூர்
கிராம அபிவிருத்தி சங்கம் அனுசரணையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு
கல்வி வலய திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம் . ஐதரலி கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில்
மண்முனை வடக்கு கோட்டகல்விப் பணிப்பாளர்
கே .அருள்பிரகாசம் , ஒய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ. சுகுமாரன் ,கதிர்காமத்தம்பி
உடையார் நன்பிக்கை நிதியம் தலைவர் என் .
கனேஷானாந்தம் , கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எ .தேவதாஸ் ,கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி
அம்மன் ஆலய தலைவர் வி .ஜனமோகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான
பரிசில்களையும் , சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர் .
இந்நிகழ்வில்
ஒய்வு பெற்று சென்றுள்ள மண்முன வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்
எ சுகுமாரன் கௌரவித்து நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் , பாடசாலை அவிவிருத்தி குழு
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .