புனரமைப்பு தாமதமான நிலையில் காணப்படும் குரவிலுக்கான பிரதான வீதி!


(ஆ.யோன்சன்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குரவில் வீதியானது சுமார் 2000ற்கு மேற்பட்ட பொதுமக்கள் போக்குவரத்தினை  மேற்கொண்டு வரும்  பிரதான வீதியாகும்.
நீண்ட நாட்களுக்கு முன்பு இவ் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடையாத நிலையில் மக்கள் பாவனைக்கு மிகவும் சிரமத்தின் மத்தியில் தற்போது இந்த வீதி காணப்படுகிறது. பல்வேறு இடையூறுகளினால் மாணவர்கள்,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து  தரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடையத்தை கவனத்தில் எடுத்து    விரைவில் இதற்கான தீர்வினை  பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.