சிறைச்சாலை கைதிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது  
.

மட்டக்களப்பு சிறைச்சாலை நிறுவாகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு பெரன்டினா நிறுவன நிதி அனுசரணையில் ஹெல்பெஜ்  ஸ்ரீ லங்கா  நடமாடும் மருத்துவ மற்றும் கண் பராமரிப்பு பிரிவினறினால் மட்டக்களப்பு  சிறைச்சாலையில் உள்ள   45  சிறைக்கைதிகளுக்கு கண்கள் பரிசோதிக்கப்பட்டு மூக்குகண்ணாடி வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 45  வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் நலன்கருதி சிறைச்சாலை அத்தியட்சகரின்  கே .எம் . யு , எச் .அக்பர்  ஆலோசனைக்கும் அமைவாக சிறைச்சாலை  பிரதம ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் கைதிகளுக்கு  மூக்குகண்ணாடிகள்  வழங்கி பட்டமை குறிப்பிடத்தக்கது