(லியோன்)
பதுளை மாவட்ட மையங்கனை தமிழ்
மொழி டிப்ளோமா பயிற்சிக் கல்லூரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு
மாவட்டத்திற்குவிஜயத்தை மேற்கொண்டுள்ளனர்
கட்டான பொலிஸ் சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட நெறிக்கான பணிப்பாளர் எஸ் எஸ் பி . செல்வராஜா வழிகாட்டலின்
கீழ் மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சிக் கல்லூரியின் இணைப்பாளர் ஐ
பி . பேரின்பராஜா தலைமையில் மையங்கனை
தமிழ்மொழி டிப்ளோமா கற்கை நெறியினை
கற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலாசார
சுற்றுலா ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர் .
மட்டக்களப்பு தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு
போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில் வருகைதந்துள்ளனர் .
இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை
மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகள் , தமிழர்களின் திருமண
கலாசார வைபவம் போன்ற மட்டக்களப்பு கலாசார
விடயங்களை கற்றுக்கொண்டுள்ளனர் .
இந்த கலாசார சுற்றுலா விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்கள் 20
பேரும் , தமிழ் மொழி
பயிற்சிக் கல்லூரி பொலிஸ்
உத்தியோகத்தர்கள் 427 பேரும் கலந்துகொண்டனர்