(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களமும்
இணைந்து நடாத்தும் 2017 பிரதேச
இலக்கிய விழாவும் “, புதிய மழை “
சிறப்பு மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது ..
இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் நர்த்தன பவனம் நாட்டியாலய மாணவர்களின் நாட்டியமும் ,கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட
கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கலாசார
உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் முதன்மை
அதிதியாக தத்துவக் கவிஞர் தேனகச் சுடர் கலா பூஷணம் பொன்னுசாமி தவநாயகம் , சிறப்பு
அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்
என் . மணிவண்ணன் , , தலைக்கோல் எம் .கே . கணபதிபிள்ளை , கிழக்கு மாகான
நிர்மாணிப்பு அபிவிருத்தி ஒன்றிய தலைவர் வி ரஞ்சிதமூர்த்தி ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார
உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பலர்
கலந்துகொண்டனர் .