தேசிய கலை இலக்கியப்பெருவிழா ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்

மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலக தேசிய கலை இலக்கியப்பெருவிழாவானது பிரதேச செயலாளர்  வா. வாசுதேவன் அவர்களின் தலைமையில் நேற்று (10.11.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பிரதேச செயலகத்தில்  கலாசார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விரிவுரையாளர்  சீவரெட்ணம் கலாச்சார இணைப்பாளர்  ஜெயினுலாப்தீன் பிரதேசசெயலக திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர் கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தர் கலாசார உத்தியோகத்தர்கள் இலக்கியவாதிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.