மின்சார சபையின் 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரத்ததான முகாம்

(லியோன்)

இலங்கை மின்சார சபையின் 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை காரியாலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


இதற்கு அமைய “ இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியிலாளர் காரியாலயத்தில் மாபெரும் இரத்ததான முகாமும் ஒன்று நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில்  வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது .

இந்நிகழ்வு  பிரதேச பிரதம மின் பொறியிலாளர் திருமதி . அனிதா பரமானந்தராஜா தலைமையில் (01) புதன்கிழமை நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  இரத்தவங்கி பிரிவு வைத்தியர் திருமதி எம் .மிதுனா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , பிரதேச மின் பொறியிலாளர் காரியாலய உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் கலந்துகொண்டனர்