(லியோன்)
இலங்கை மின்சார சபையின் 48வது ஆண்டு
நிறைவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை காரியாலயங்களில் விசேட
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
இதற்கு அமைய “ இரத்தம் கொடுப்போம்
உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின்
பொறியிலாளர் காரியாலயத்தில் மாபெரும் இரத்ததான முகாமும் ஒன்று நிகழ்வினை
சிறப்பிக்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது .
இந்நிகழ்வு பிரதேச பிரதம மின்
பொறியிலாளர் திருமதி . அனிதா பரமானந்தராஜா தலைமையில் (01) புதன்கிழமை
நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவு வைத்தியர் திருமதி எம்
.மிதுனா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , பிரதேச மின் பொறியிலாளர் காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்