எமது பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று தனிநாடு அமைந்திருந்தால், அது தமிழரின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இருந்திருக்கும் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
நான்கு பேரை 400 ஆகவும் 4000 ஆகவும் மாற்றிய மிக பிரம்மாண்டமான போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.
விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்மீது அளவு கடந்த அன்பு. எமது பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம்    எடுக்க வேண்டும் என்று தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த, எனது மனதை கவர்ந்த தலைவர் பிரபாகரன் எனவும் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.