கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச போதைத் தடுப்பு குழு அமைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்   No drugs நாம் Youth.  " போதைப் பொருளற்ற நாடு " எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில்  500 வேலைத்திட்டம் 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப கோறளைப்பற்று வாழைச்சேனை   பிரதேச செயலாளர் பிரிவிற்கான  வேலைத்திட்டம் கோறளைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அ.வினோத் தலைமையில் த , சபியதாஸ் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில்  இன்று திங்கட்கிழமை   ( 30.10.2017) பிரதேச செயலக   மண்டபத்தில் நடைபெற்றது


இந் நிகழ்வில் அதிதிகளாக கோறளைப் பற்று பிரதேச செயலாளர்  வி.வாசுதேவன்,  பிரதேச சுகாதார பரிசோதகர் ஜே.யசோதரன் மற்றும், புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய குருக்கள் பி.பிரணவ சர்மா , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ முகாமையாளர் சா.கிருபைராசா ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விளக்கமளித்ததோடு பிரதேச போதைத்தடுப்பு குழுவொன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச இளைஞர் யுவதிகள் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.