மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

லியோன்)

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  வருடாந்த   பரிசளிப்பு  விழா (27) வெள்ளிக்கிழமை   நடைபெற்றது 
 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய    கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் ஜே ஆர் பி   விமல்ராஜ்  தலைமையில்  கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது  

நடைபெற்ற வருடாந்த கல்லூரியின் பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து   பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் பிரதம விருந்தினராக  கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகல்லாகம , சிறப்பு விருந்தினர்களாக கிழக்குமாகாண  ஆளுநரின் செயலாளர் ஜே எஸ் டி எம்  அசங்க அபேவர்த்தன . கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச் இ எம் டப்ளியு ஜி  டி திசாநாயக , கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே கருணாகரன்  மற்றும்  மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர்  கே பாஸ்கரன் ,,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர்