இளைஞர்களுக்காக ஆரையம்பதியில் போதைத்தடுப்பு வேலைத்திட்டம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்   No drugs நாம் Youth.  " போதைப் பொருளற்ற நாடு " எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில்  500 வேலைத்திட்டம் 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான  வேலைத்திட்டம் மண்முனை பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ச.திவ்வியநாதன் தலைமையில் , வி.தருமரெத்தினம் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில்  இன்று திங்கட்கிழமை   ( 30.10.2017) மண்முனை பற்று பிரதேச சபை  மண்டபத்தில் நடைபெற்றது


இந் நிகழ்வில் அதிதிகளாக மண்முனை பற்று பிரதேச சபை செயலாளர்                  ந. கிருஸ்ணபிள்ளை மற்றும் மண்முனை பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.ரமேஷ் மற்றும் சுகாதார பரிசோதகர், ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விளக்கமளித்ததோடு பிரதேச போதைத்தடுப்பு குழுவொன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.