மாவட்ட ரீதியான புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள்.




நேற்று இரவு வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி
மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் குறித்த தகவல்களும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் 155 வெட்டுப்புள்ளிகள், கிளிநொச்சி 154 புள்ளிகள், மன்னார் 153 புள்ளிகள், வவுனியா 154 புள்ளிகள், முல்லைத்தீவு 154 புள்ளிகள் என வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மட்டக்களப்புக்கு 154 புள்ளிகளும், அம்பாறைக்கு 154 புள்ளிகளும், திருகோணமலைக்கு 152 புள்ளிகளும், கொழும்புக்கு 156 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் நுவரெலியா 154, கண்டி 156, பதுளை 153, இரத்தினபுரி 154 என தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுபுள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருந்தங்கள் குறித்து எதிர்வரும் 20 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.