கோறளைப்பற்று தெற்கு வாகனேரியில் தையல் பயிற்சி நெறி ஆரம்பம்.

(சசி துறையூர் ) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச வாகனேரி கிராமத்தில் மட்டக்களப்பு மாவட்ட Ceri நிறுவனத்தின் அனுசரணையுடன்
யுவதிகளுக்கான தையல் பயிற்சி  நெறி இன்று 16.10.2017 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது .

பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு த.விந்தியன்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது வாகனேரி காமாட்சி இளைஞர் கழகத்திற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணு சிரம சக்தி வேலைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டீன் மூலம் அமைக்கப்பட்ட  ஙாலக கட்டிடமும் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .

இந் நிகழ்வில் தையல் பயிற்சி நெறிக்கு அனுசரணை வழங்கும் Ceri நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரி.தர்சன், வாகனேரி கிராம சேவகர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஒவியராஜா, இளைஞர் கழக தலைவர் ஜ.பார்த்தீபன், பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜி.கமல்ராஜ் உட்பட கிராம பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய Ceri நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரி.தர்சன், இப்பிரதேச இளைஞர்களுக்காக தமது நிறுவனத்தின் மூலம் கனரக வாகன பயிற்சி நெறியும் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.










.