கொக்கட்டிச்சோலையில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை -  பிரதேசத்தில் நேற்று  மாலை வளவொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பினை வழங்கிவருகின்றனர்.

பொலிஸாரினர் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஓய்வெடுக்க அமர்ந்த இடத்திலேயே இந்த கைக்குண்டு கண்பிடிக்கப்பட்டுள்ளதுடன் இது விடுதலைப்புலிகளின் காலத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.