கிண்ணையடி வெண்ணிலா இளைஞர் கழக தலைவர் இந்தியா பயணம்.


(சசி துறையூர்) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கிண்ணையடி வெண்ணிலா  இளைஞர் கழகத்தின் தலைவர் செல்வன் அருலேந்திரன் வினோத் இந்தியா பெங்களூர்க்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பயணமாகியுள்ளார்.

பெங்களூரில் நடைபெறும் இளைஞர் அபிவிருத்தி,மற்றும் அனுபவபகிர்வு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களில் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.

 கோறளைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவரான இவர், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை கிராமிய, பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இவர் வழங்கிய ஒத்துழைப்பு, மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்திற்க்காக இவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 10.09.2017 அன்று இலங்கையிலிருந்து  சென்ற 13பேர் அடங்கிய குழு  ஆறு நாட்கள் பெங்களூரில் தங்கியிருந்து பயிற்சிகள் நிறைவு செய்து தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.