(லியோன்)
தேசிய கடல் கரை சுத்திகரிப்பு தினத்தினை முன்னிட்டு .
பிரதான நிகழ்வு (21) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது
பிரதான நிகழ்வு (21) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாநகர சபையும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின்
கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்திவருகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர
பிரதேசங்களை உள்ளடக்கிய எட்டு பிரதேச செயலகப்பிரிவுகளில் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் கே .குணநாதன் தலைமையில் இன்று நடைபெற்ற
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் உட்பட
நகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.