(லியோன்)
மட்டக்களப்பு காத்தான்குடி மாநகர சபைக்குற்பட்ட பொது சுகாதார வைத்திய
அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் (16) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன
.
டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு
ஒழிப்பு நடவடிக்கைகள் சுகாதார வைத்திய
அதிகாரி யு எல் . நசிர்தீன் தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ்
உத்தியோகத்தர்கள் , பொதுசுகாதார
பரிசோதகர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்ததாக
முன்னெடுக்கப்பட்டது .
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட வீட்டு
உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையில் காத்தான்குடி சுகாதார
வைத்திய அதிகாரி வைத்தியர் யு எல் . நசிர்தீன் உட்பட
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,
கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.