காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

(லியோன்)

மட்டக்களப்பு காத்தான்குடி மாநகர சபைக்குற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள்  (16) சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டன .


டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட    பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி யு  எல் . நசிர்தீன்   தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,  பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  இணைந்ததாக  முன்னெடுக்கப்பட்டது . 

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  அடையாளம் காணப்பட்ட  வீட்டு  உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 


மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  யு  எல் . நசிர்தீன்  உட்பட    பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,  , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்   கலந்துகொண்டனர்.