(லியோன்)
மட்டக்களப்பு பாலமீன்மடு கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் ,
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் - பாலமீன்மடு கடக்கரை பகுதியில் இருந்து வாவிக்கரை வீதி ,சின்னுப்போடை
பகுதியை சேர்ந்த ( சுப்பிரமணியம் குமார் , வயது 41 ) என்பவர் சடலம் பொலிசாரினால்
மீட்கப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சில தடய
பொருட்கள் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
சடலமாக மீட்கப்பட்ட குறித்த
நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர்