அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய   வருடாந்த பரிசளிப்பு  விழா  இன்று மாலை நடைபெற்றது 



மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய   வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி என். தர்மசீலன்  தலைமையில்  பாடசாலை  பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .


ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .


பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்   



இந்த வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் பிரதம விருந்தினராக  கிழக்குமாகாண விவசாய ,கால்நடை ,கூட்டுறவு , மீன்பிடி அமைச்சர் கே .துரைராஜசிங்கம்  மற்றும் அதிதிகளாக மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர்கள் கே .பாஸ்கரன் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் செல்வராஜா பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்