பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

(லியோன்)


மட்டக்களப்பு  பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு  ஆலய வருடாந்த  திருவிழா  திருப்பலி திருகோணமலை  மறை மாவட்ட ஆயரினால் இன்று  ஒப்புகொடுக்கப்பட்டது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சிறப்பு மிக்க பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு  ஆலயத்தின் 24வது  வருடாந்த திருவிழா விசேட திருப்பலி திருகோணமலை  மறை மாவட்ட ஆயர்  கிறிஸ்டி நோயல் இமானுவேல்  ஆண்டகையினால்   ஒப்புகொடுக்கப்பட்டது

ஆலய திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குதந்தை சி .வி . அன்னதாஸ் தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா தொடர்ந்து  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.

நேற்று  சனிக்கிழமை மாலை  குழந்தை இயேசுவின் திரு உருவம் பவனியும் தொடர்ந்து  விசேட திருப்பலி ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றது


திருவிழா திருப்பலி இன்று   ஞாயிற்றுக்கிழமை  காலை 07.15 மணிக்கு  திருகோணமலை  மறை மாவட்ட ஆயர்  கிறிஸ்டியன்  நோயல் இமானுவேல்  ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்ட  திருவிழா திருப்பலியில் பங்குதந்தை சி .வி . அன்னதாஸ் ,அருதட்தந்தை பாக்கியநாதன்   ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் . 
   

திருப்பலியை தொடர்ந்து குழந்தை இயேசுவின் திரு உருவம் பவனியும் தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் திருச்சொரூப ஆசிர்வாதமும்  நடைபெற்றது

இந்த திருவிழா  திருப்பலியில் பெருமளவான பங்கு மக்கள் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்