(லியோன்)
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை
புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி
கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை
புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா (21) வெள்ளிக்கிழமை
மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் தொடர்ந்து தினமும்
மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை, திருப்பலியும் இடம்பெற்றது.
(29) சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்
இடம்பெற்றதுடன் தொடர்ந்து அன்னையின்
திரு உருவம் பவணி வழமையான
வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
(30) ஞாயிற்றுக்
கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில்
பங்குதந்தை கிரைடன் , அருட்தந்தை இன்னாசி
ஜோசப் ,அருட்பணி நோட்டன் , ,அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .
திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட
ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள்
கொடி இறக்கப்பட்டு வருடாந்த திருவிழா இனிதாக நிறைவுபெற்றது .
வீச்சுக்கல்முனை
புனித அன்னம்மாள்
ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து
சிறப்பித்தனர் .