மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.

2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி வரை ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தோடு இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் இது­வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நோயா­ளர்­களின் தொகை­யா­னது கடந்த வருடம் முழு­வ­திலும் இனங்­காணப்­பட்ட டெங்கு நோயா­ளர்­களின் தொகையை காட்­டிலும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.


டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளமை தொடர்பில் சுகா­தார அமைச்சு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்பட்டுள்ளதாவது, இந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மேல் ­மா­கா­ணத்­தி­லேயே அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் 22,186 பேரும், கம்­பஹா மாவட்­டத்தில் 17,228 பேரும், களுத்­து­றையில் 5616 பேரும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர்.அத்துடன் திரு­கோ­ண­ம­லையில் 4415 பேரும், மட்­ட­க்க­ளப்பு மாவட்­டத்தில் 4135 பேரும் யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 3255 பேரும், குரு­ணா­க­லில் 5943 பேரும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 6081 பேரும் மாவட்­ட­ளவில் பதி­வா­கி­யுள்­ளனர்.

தற்பொழுது இருந்துவரும் டெங்கு அபாயத்தினை எதிர்காலத்தில் வருமுன் தடுக்கும் வலிமையான பரிந்துரைகளை கண்டறிவதற்கான மேற்படி ஆய்வானது ஜோஜியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த வண்ணம் அங்கு இருந்து வருகைதந்த பேராசிரியர் விக்ரம அவர்களின் பரிந்துரையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் பிரதேசத்தில் எடுத்துச் செல்வதற்கான பூர்வாங்க கலந்துரையாடலும் அதற்கான பயிற்சியும் வழங்கும் நிகழ்வு 22.07.2017 அன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் சுகுணன் அவர்களின் உதவியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பேராசிரியர் விக்ரம, பேராசிரியர் துளித்த, விரிவுரையாளர், தாதியர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏதிர்காலத்தில் இந்த அனர்த்தம் இல்லாமல் செய்யும் காரணிகளை அடையாளம் காண்பதற்காக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தினை அண்டியுள்ள கிராமங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.