மகாஜன கல்லூரி மாணவர்களினால் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் துப்பரவு செய்யும் பணிகள்

(லியோன்)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களினால் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில்  துப்பரவு  செய்யும்  பணிகள் இன்று  முன்னெடுக்கப்பட்டன
 .

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் எதிர் வரும் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது . 

இதனை  முன்னிட்டு ஆலய வளாகத்தை துப்பரவு செய்யும் நடவடிக்கையினை  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி அதிபர் கே .அருமைராஜா தலைமையில் கல்லூரி இந்து  மா மன்ற ஆசிரியர் திருமதி பத்மினி அருளானந்தம் ஒழுங்கமைப்பில் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  ஆலய வளாகத்தில்  முன்னெடுக்கப்பட்டன.


இந்த சிரமதான பணியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டன .