சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

(லியோன்)


தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகாரசபையும் கல்வி அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்ற சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன் .
         

இதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான  விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வு  கலந்துரையாடலில்  ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் இடையிலான தொடர்பு  மற்றும்  மாணவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஆசிரியர்கள் எவ்வாறு கையாள்வது , சமூகத்தில் சிறுவர்கள் முகம் கொடுக்கின்ற சவால்கள் போன்ற  விடயங்கள்  தொடர்பாகவும் , பிள்ளைநேய பாடசாலையின்  அவசியம் குறித்தும் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது .


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 15 பாடசாலைகளின் மாணவர்கள் , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மாவட்ட உளசமூக உத்தியோகத்தர்கள் ,அதிபர்கள் ,ஆச்சிரியர்கள் , ஆசிரியர்கள் , பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் , சிறுவர் ,பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,   வளவாளராக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  திருமதி . நிஷா றியாஸ் ஆகியோர் கலந்துகொண்டார் .