அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் பதவிக்கு வேட்பாளர் மனு தாக்கல்

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக  தெரிவு செய்வதற்குரிய வேட்பாளர் நியமன பத்திரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன
.

கிழக்கிலங்கையில் பிரசித்திப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு குருகுல வம்சம் மற்றும் வேளாளர்குல வம்சம் ஆகிய இரு வம்சங்களிலும் இருந்து வண்ணக்கர் ,உதவி வண்ணக்கர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்குரிய வேட்பாளர் நியமன பத்திரங்கள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா  முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டன .          

ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக  போட்டியிடுவதற்காக  மூன்று பேரும் , உதவி வண்ணக்கர்களாக போட்டியிடுவதற்காக நான்கு பேரும் வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளதாக  பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா தெரிவித்தார் . 

இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கள் எதிர் வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 03.00 வரை ஆலய அன்னதான சபை மண்டபத்தில் நடைபெறும் .


அளிக்கப்பட வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார் .