மட்ட்களப்பு கிரான்குளத்தில் விபத்து இளைஞர்கள் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கிரான்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வான் திருப்ப முனைந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இளைஞர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.