(லியோன்)
மட்டக்களப்பு பிள்ளையாரடி
நல்லையா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு (27) செவ்வாய்கிழமை நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிள்ளையாரடி நல்லையா
வித்தியாலய மாணவர்களுக்கு பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய
நிர்வாக சபையினால் பாதணிகள் வழங்கும்
நிகழ்வு அதிபர் எ .குணரெத்தினம் தலைமையில்
பாடசாலையில் இன்று நடைபெற்றது .
பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினால் பல சமூக
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதன்கீழ் வறுமை கோட்டின்கீழ் வாழும்
குடும்பங்களில் பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணிகள்
வழங்கப்பட்டன .
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்ததுடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நாட்டி வைத்தார் .
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய செயலாளர் வி . பிரசாத் ,பொருளாளர் என் .மகேந்திரன்
மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .