பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு  (27)  செவ்வாய்கிழமை நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய   மாணவர்களுக்கு பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய நிர்வாக சபையினால்  பாதணிகள் வழங்கும் நிகழ்வு அதிபர் எ .குணரெத்தினம்  தலைமையில் பாடசாலையில் இன்று  நடைபெற்றது .

பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய   நிர்வாகத்தினால் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதன்கீழ் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களில் பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன .

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன்  மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்ததுடன்  பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நாட்டி வைத்தார் .


இந்நிகழ்வில் விருந்தினர்களாக பிள்ளையாரடி புரவுபிள்ளையார் ஆலய செயலாளர் வி . பிரசாத் ,பொருளாளர் என் .மகேந்திரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்  கலந்துகொண்டனர் .