29வது தேசிய இளைஞர் விளையாட்டு கபடி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி தெரிவு.

(சசி துறையூர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  29வது தேசிய இளைஞர் விளையாட்டு குழுப் போட்டீகளின் வரிசையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடிப் போட்டியில் வெற்றி பெற்று இவ்
வருட இறுதியில் நடைபெறவுள்ள 29வது தேசிய இளைஞர் மெய்வல்லுணர் விளையாட்டு விழாவின் போது
இறுதிப் போட்டியில் யாழ் மாவட்ட  மகளீர் அணியை எதிர்த்து போட்டியிடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது.

அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டித் தொடரில் குழு B பிரிவில்  போட்டியிட்ட கண்டி, இரத்தினபுரி,குருணாகல் அணிகளை பலப்பரிட்சை நடாத்தி வெற்றி கொண்டது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கிரான் பிரதேச மகளீர் அணி.


 இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக தேசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளின் கபடி
போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மகளிர் அணி என்ற வரலாற்று பதிவினையும் நிலை நாட்டியுள்ளனர்.