மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மற்றுமொரு வெற்றி.

(சசி துறையூர்)
இன்று அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற
29வது தேசிய இளைஞர் விளையாட்டு
ஆண்களுக்கான கபடி போட்டித் தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய கிரான் பிரதேச ஆண்கள் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது.


புத்தளம்,கிளிநொச்சி,மன்னார், அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கழக அணிகளை வெற்றி கொண்டதன் மூலமே இந்த வாய்ப்பினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.